Thursday, June 10, 2010

வலிகள் மனதோடு

வலிகள் மனதோடு
இருக்கும்வரை தான்
வலிக்கு அழகு....

காதலில் உண்மை
இருக்கும்வரை தான்
காதலுக்கு அழகு....

நட்புக்கு நம்பிக்கை
இருக்கும்வரை தான்
நட்புக்கு அழகு....

மனைவியின் நேசம்
இருக்கும்வரை தான்
வாழ்க்கை அழகு....

என் உயிரோடு ஒன்றி
நீ இருக்கும்வரை
நானும் அழகு....

No comments:

Post a Comment